பக்தர்கள் காத்திருப்பதை தடுக்க திருப்பதியில் மீண்டும் இலவச தரிசன டோக்கன் வழங்க ஏற்பாடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசனத்தில் தற்போது தினமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் திருப்பதியில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் செல்ல அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், ரெயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ சாமி சத்திரம் மற்றும் பஸ் நிலையம் அருகே உள்ள சீனிவாசன் ஆகிய 3 இடங்களில் கவுண்டர்கள் அமைத்து தினமும் 40 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தது.

கடந்த வாரம் திரளான பக்தர்கள் இலவச தரிசன டோக்கன் வாங்க குவிந்ததால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டு சில பக்தர்கள் காயம் அடைந்தனர்.

இதனால் தேவஸ்தான அதிகாரிகள் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுவதை நிறுத்திவிட்டு நேரடியாக இலவச தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதித்தனர்.

பக்தர்கள் வைகுண்ட கியூ காம்ப்ளக்ஸ்சில் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு சென்று வருகின்றனர்.

தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் தரிசனத்திற்கு குவிந்து வருகின்றனர். இதனால் சுமார் 8 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலர் குமார் ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில்:-

நேரம் ஒதுக்கப்பட்ட இலவச தரிசன டோக்கன்கள் மீண்டும் வழங்க தேவஸ்தானம் பரிசீலனை செய்து வருகிறது. டோக்கன் வழங்கப்படுவதால் நீண்டநேரம் காத்திருக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு வர ஏதுவாக இருக்கும் என தர்மா ரெட்டி தெரிவித்தார்.

இதையும் படிக்கலாம்….இன்று சித்திரை மாத சதுர்த்தி… விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.