ஐபிஎல்: பஞ்சாப் அணியை 115 ரன்களில் கட்டுப்படுத்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்

மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக ஜிதேஷ் சர்மா 32 ரன்கள் சேர்த்தார். கேப்டன் மயங்க் அகர்வால் 24 ரன்கள், ஷாருக் கான் 12 ரன்கள், ராகுல் சாகர் 12 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
டெல்லி தரப்பில் கலீல் அகமது, லலித் யாதவ், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் எடுத்தனர். 
இதையடுத்து 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்குகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.