மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்! உச்சநீதிமன்றம்

டெல்லி: தமிழகத்தைச்சேர்ந்த மக்கள் நலப்பணியாளர்கள் மீதான வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. இதனால், இந்த வழக்கு மேலும் தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியின்போது சாலைப்பணி உள்பட சில பணிகளுக்காக மக்கள் நலப்பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டனர். இது அதைத்தொடர்ந்து வந்த அதிமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. இதனால்,  13,500 மக்கள் நலப்பணியாளர்கள் வேலை இழந்தனர். இது  அரசியல் காழ்ப்புணர்ச்சி  என்று குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும், மக்கள் நலப்பணியாளர் வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தப்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து,.  கடந்த 3 மாதங்களில் 3 முறை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தைப்போல, நகர்புற ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்படி  மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாதம் ரூ.7500 ஊதியத்துடன் மீண்டும் வேறு பணி வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்திருந்தது. இதைத்தொடர்ந்து,  மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கை 4 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த நிலையில், மக்கள் நலப்பணியாளர்  வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,ம க்கள் நலப்பணியாளர்கள் தொடர்பான வழக்கை விரிவாக விசாரிப்பதற்காக வேறு அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் வழக்கு மேலும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.