குழந்தைகளுக்கு பொது கோவிட் தடுப்பூசிகள்: அரசு ஒப்புதல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: 6 முதல் 12 வயதுடைய குழந்தைகளுக்கு, பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசி போட மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 முதல் 12 வயது குழந்தைகளுக்கு கார்பிவாக்ஸ் தடுப்பூசியும், 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு ஜைக்கோவ்-டி தடுப்பூசியும் செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

நம் நாட்டில், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை, மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதற்கிடையே, 2 – 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கோவாக்சின் தடுப்பூசியை செலுத்துவதற்கு அனுமதி கோரி, பரிசோதனை முடிவுகளையும், தரவுகளையும் சி.டி.எஸ்.சி.ஓ., எனப்படும், மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் சமர்ப்பித்து, ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் கடந்த ஆண்டு விண்ணப்பித்தது.

latest tamil news

இந்நிலையில், 6 முதல் 12 வயதுடைய குழந்தைகளுக்கு அவசர காலத்தில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல், 5 முதல் 12 வயது குழந்தைகளுக்கு கார்பிவாக்ஸ் தடுப்பூசியும், 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு ஜைக்கோவ்-டி தடுப்பூசியும் செலுத்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.