வலி இல்லாமல் காதல் இல்லை, அந்த வலி துவங்கிடுச்சு: விக்னேஷ் சிவன் உருக்கம்

விக்னேஷ் சிவன்
இயக்கத்தில்
நயன்தாரா
, விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்டோர் நடித்திருக்கும்
காத்து வாக்குல ரெண்டு காதல்
படம் ஏப்ரல் 28ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.

அந்த படத்தை இயக்கியிருப்பதுடன், நயன்தாராவுடன் சேர்ந்து தயாரிக்கவும் செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன். சொந்த தயாரிப்பு நிறுவன படத்திற்கே நயன்தாரா ஏன் விளம்பரம் செய்யவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் படம் குறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விக்னேஷ் சிவன் கூறியிருப்பதாவது,

படம் இயக்குவதின் சிறப்பான அனுபவமே கடைசி 5 நாட்கள் தான். அனிருத்துடன் சேர்ந்து காட்சிகளை பார்த்தேன். இந்த நாட்களுக்காக தான் வாழ்கிறேன்.

என் லவ், என் பேபியுடன் கடைசி 5 நாட்கள். இந்த படத்திற்காக அதிகமாக உழைத்திருக்கிறோம். அதனால் பட வேலை முடியும்போது வரும் வலி ஏற்கனவே துவங்கிவிட்டது. அது சிறிது வேதனையானதும் கூட. ஆனால் வலி இல்லாமல் லவ் இல்லை என்பதால் அந்த வலிகள் ஓகே என்று தெரிவித்துள்ளார்.

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை அடுத்து அஜித் குமாரை வைத்து ஏ.கே. 62 படத்தை இயக்கவிருக்கிறார் விக்னேஷ் சிவன். அந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு விரைவில் திருமணம்: ஆனால்…

ஏ.கே. 62 வேலையை துவங்கும் முன்பு நயன்தாராவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறாராம் விக்னேஷ் சிவன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.