எல்.ஐ.சி.யின் பொதுப்பங்கு மே 4-ஆம் தேதி வெளியீடு

புது டெல்லி:
எல்.ஐ.சி நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டு தேதி மே 4-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 
இந்த வெளியீட்டு மூலம் ரூ.21,000 கோடி திரட்ட எல்.சி.சி திட்டமிட்டுள்ளது. இதையடுத்து ஒரு பங்கின் விலை 902 ரூபாயில் இருந்து 949 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பங்கு வெளியீடு மே 9-ஆம் தேதி நிறைவடைகிறது.
இத்துடன் பங்குகள் வாங்குவதில் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பாலிசிதாரர்களுக்கு 60 ரூபாய் வரையிலும்; சில்லரை முதலீட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 40 ரூபாய் வரையிலும் தள்ளுபடி வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
துவக்கத்தில், அரசிடம் உள்ள 5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதாக முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 3.5 சதவீத பங்கை விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.