சீண்டிய பராமரிப்பாளரின் விரல்களை துண்டித்த சிங்கம்| Dinamalar

கிங்க்ஸ்டன்: வனவிலங்கு பூங்காவில் பராமரிப்பாளர் கையை சிங்கம் கடித்துக் குதறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

வட அமெரிக்காவில், கரீபியன் கடலில் அமைந்துள்ள தீவு நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் உள்ள வனவிலங்கு பூங்காவில், கூண்டுக்குள் இருந்த சிங்கத்தை அதன் பராமரிப்பாளர் சிறு துளை வழியாக சிங்கத்தை தொட்டு சீண்டினார்.

சிறிய துளை என்பதால் சிங்கத்தால் ஒன்றும் செய்ய முடியாது என நினைத்தார். ஆனால், கடும் கோபத்தில் இருந்த சிங்கம் ஒரு கட்டத்தில் பராமரிப்பாளரின் கைவிரல்கள் கவ்வி கடித்தது. அவர் கடுமையாக போராடி தன்னை விடுவித்துக் கொண்டார்.

ஆனால், அவரது விரல்கள் துண்டிக்கப்பட்டன இந்த சம்பவம் நடந்த போது அங்கிருந்த பார்வையாளர்களில் சிலர், ‘மொபைல் போனில்’ இந்தக் காட்சியை ‘வீடியோ’ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அது வேகமாக பரவி வருகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.