ஏப்ரலில் 16 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களின் கணக்குகள் தடை: வாட்ஸ் அப் அதிரடி

புதுடெல்லி: ஏப்ரல் மாதத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான இந்திய பயனர்களின் கணக்குகளை தடை செய்துள்ளதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. மொபைல் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப், செயலியில் தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டை தடுக்க ஏப்ரல் மாதத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான இந்திய பயனர்களின் கணக்குகளை தடை செய்துள்ளது என்று நிறுவனத்தின் மாதாந்திர அறிக்கை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, பயனர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் நிறுவனம், 122 கணக்குகளை தடைசெய்தது. அதே நேரத்தில் வாட்ஸ் அப்பில் தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டை தடுக்க 16.66 லட்சம் கணக்குகளை தடை செய்துள்ளது. இது தொடர்பாக வாட்ஸ் அப் கூறும்போது, ‘நாங்கள் குற்றம் நடைபெறுவதை தடுப்பதில் கவனம் செலுத்துகிறோம், ஏனென்றால் தீங்கு ஏற்பட்ட பிறகு அதை கண்டறிவதை விட, தீங்கு விளைவிக்கும் செயலை முதலில் தடுப்பது மிகவும் சிறந்தது என்று நம்புகிறோம்’ கூறியுள்ளது. வாட்ஸ்அப் கட்டமைப்பின்படி பயனரின் கணக்கை மதிப்பிட்டு, செயலியை தவறாக பயன்படுத்துகிறார் என்று தெரிய வரும் போது, பயனரின் கணக்கை தடை செய்வதாக அறிக்கை கூறியுள்ளது. இதனால் பயனர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.