ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை தேடாதீர்கள்: ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்து| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நாக்பூர்: ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் தேட வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

உ.பி., மாநிலம் வாரணாசியில் இருக்கும் ஞானவாபி மசூதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில், நடத்தப்பட்ட ஆய்வில், சிவலிங்கம் கூறப்பட்டது தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்ந்து நீதிமன்ற விசாரணையில் உள்ளது

நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது: ஞானவாபி மீது வழிபாடு வைத்துள்ளோம். அதன்படி ஏதாவது செய்தாலும் பரவாயில்லை. ஆனால் மசூதியிலும் ஏன் சிவலிங்கத்தை ஏன் தேட வேண்டும். ஞானவாபி சர்ச்சை சில நம்பிக்கை சிக்கல்களை உள்ளடக்கியது. இதனை இரு சமூகத்தினரும் பேசி தீர்த்து கொள்ள வேண்டும். மாறாக நீதிமன்றத்தின் வாயிலாக முடிவு வந்தால், அதனை இரு தரப்பினரும் ஏற்று கொள்ள வேண்டும். ஞானவாபி பிரச்னை சென்று கொண்டுள்ளது. வரலாற்றை நாம் மாற்ற முடியாது. அதனை, இன்றைய ஹிந்துக்களோ அல்லது இஸ்லாமியர்களோ உருவாக்கவில்லை. இது முன்னர் நடந்தது. வெளியில் இருந்து தாக்குதல் நடத்துபவர்கள் மூலம் இஸ்லாம் வந்தது. இந்த தாக்குதல்களில், சுதந்திரத்தை விரும்பியவர்களின் மன உறுதியை குறைக்க கோவில்கள் இடிக்கப்பட்டன. ஹிந்துக்கள், முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல. பண்டைய கால முஸ்லிம்களும், ஹிந்துக்கள் தான்.

latest tamil news

புதிதாக எந்தவொரு இயக்கத்தையும் ஆரம்பிக்க ஆர்எஸ்எஸ் ஆதரவாக இல்லை. தினமும் புதிது புதிதாக பிரச்னைகளை வெளிக்கொண்டு வரக்கூடாது. பிரச்னையை நாம் ஏன் பெரிதாக்க வேண்டும். ஹிந்துக்கள் எந்தவொரு பிரச்னையை எழுப்பும் முன்னர், முஸ்லிம்களும் நமது மக்கள் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் நம்பிக்கை மட்டுமே மாறியுள்ளது. அவர்கள் திரும்பி வர தயாராக இருந்தால், திறந்த மனதுடன் வரவேற்க வேண்டும். அவர்கள் விரும்பாவிட்டாலும்,நாம் அதிருப்தி அடைய தேவையில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.