ஊராட்சி நிதியை தனது வங்கி கணக்கிற்கு மாற்றி முறைகேடு செய்த ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்.!

மதுரை அலங்காநல்லூர் அருகே ஊராட்சி நிதியில் முறைகேடு செய்த புகாரில் ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்து ஆட்சியர் அனிஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார்.

கோட்டைமேடு ஊராட்சியில் தலைவராக இருந்த சர்மிளா ஊராட்சி நிதி 10 லட்சத்து 44 ஆயிரம் ரூபாயை 2020-ம் ஆண்டு தனது வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார்.

இதுதொடர்பாக கிராம மக்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் முறைகேடு நடைபெற்றதை உறுதி செய்ததையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.