தனியார் பள்ளிகளுக்கு அன்பில் மகேஷ் எச்சரிக்கை

பள்ளி கட்டணம் தொடர்பாக தனியார் பள்ளி நிர்வாகங்கள் கண்டிப்போடு இருக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிகளில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற லிங்க் இந்தியா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ்  பின்னர் செய்தியாளர்களிடம் புத்தகங்கள் சீருடைகள் 20 நாட்களில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார்.

அதோடு பள்ளி கட்டணம் தொடர்பாக தனியார் பள்ளி நிர்வாகங்கள் கண்டிப்போடு இருக்கக்கூடாது என்றும் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், பள்ளிகள் திறக்கும் நேரத்தை அந்தந்த பள்ளிகளே முடிவு எடுக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.