சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு

பம்பா:  உலகப்புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை ஆனிமாத பூஜைக்காக திறக்கப்பட இருப்பதாக கேரள தேவசம் போர்டு தெரிவித்து உள்ளது.

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆனி மாத பூஜைக்காக கோயில் நடை இன்று மாலை 6 மணிக்குத் திறக்கப்படு கிறது. முன்னதாக பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு  கடந்த  வியாழக்கிழமை பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடு பூஜைகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, அன்று  இரவு 10.30 மணிக்கு மீண்டும் நடை அடைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆனி மாத பூஜைக்காக இன்று மாலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது.  அதைத்தொடர்ந்து,   சிறப்பு வழிபாடு பூஜைகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடைபெறுகிறது. நாளை காலை முதல்வல் பக்தர்களுக்கு அனமதி வழங்கப்படுகிறது.

இதுதொடர்பாக தேவசம் போர்டு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வருமாறு  வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  மேலும்,  வழக்கம் போல் இணையதள முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் உடனடி தரிசன முன்பதிவு வசதி செய்யப்பட்டு உள்ளது என்றும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.