பெண்கள் இருக்கையில் அமர்ந்தோருக்கு அபராதம்| Dinamalar

பெங்களூரு : கர்நாடகாவில், மாநகர பஸ்களில், பெண்களுக்கான இருக்கைகளில் அமர்ந்திருந்த ஆண் பயணியரிடம், 17 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கர்நாடக தலைநகர் பெங்களூரில் இயங்கும் மாநகர பஸ்களில், பெண்களுக்கு என தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், பல பஸ்களில், பெண்கள் இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்து செல்வதாக, ஏராளமான புகார்கள் வந்தன.

இதையடுத்து, மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள், சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், பல்வேறு பஸ்களில், பெண்கள் இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்த, 170 ஆண் பயணியரிடம், 17 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.