1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலை: பிரதமர் உத்தரவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியில் அமர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பல்வேறு அரசு துறைகளில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல துறைகளில் உள்ள மனித வளம் குறித்து பிரதமர் மோடி ஆய்வு நடத்தினார்.

latest tamil news

இதனை தொடர்ந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: ஆய்வை தொடர்ந்து அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேரை உடனடியாக பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.