வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை,-மஹாராஷ்டிராவில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், புனேயைச் சேர்ந்த 43 வயது நபர் தேர்ச்சி பெற்றார். அவரது மகன் தோல்வி அடைந்தார்.
![]() |
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்தவர் பாஸ்கர், 43. குடும்ப வறுமை காரணமாக ஏழாம் வகுப்புக்கு மேல் அவரால் படிக்க முடியவில்லை. திருமணமான பின், படிக்க முயற்சித்தார்; ஆனால் முடியவில்லை. சில மாதங்களுக்கு முன், மஹாராஷ்டிராவில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்தது. பாஸ்கர் இந்த தேர்வை எழுதினார்.
![]() |
இதற்காக இரவு, பகலாக படித்தார். இவருடைய மகனும் இந்த தேர்வை எழுதினார். இந்நிலையில் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இதில் பாஸ்கர் தேர்ச்சி அடைந்தார். ஆனால் அவரது மகன் தோல்வி அடைந்தார். இது குறித்து பாஸ்கர் கூறியதாவது:சிறு வயதில் நிறைவேறாத ஆசையை, இப்போது நிறைவேற்றி விட்டேன். இதற்காக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து படித்தேன். அதற்கு பலன் கிடைத்துள்ளது. ஆனால், என் மகன் தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement