பொறியியலாளர்களுக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

பொது மக்களின் மின்சார விநியோகத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வேலைநிறுத்தம் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு ஜூலை மாதம் 06 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் ஜூலை மாதம் 6ஆம் திகதி தாக்கல் செய்யுமாறும் பிரதிவாதிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.