ஆடு மேய்க்க சென்ற 9 வயது சிறுமிக்கு ஏற்பட்ட கொடூரம்.. 15 வயது சிறுவன் போக்சோவில் வழக்கு பதிவு.!

பாலியல் தொல்லை அளித்த சிறுவன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சந்தைவெளிபேட்டை பகுதியில் 9 வயதுடைய சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அந்த சிறுமி தனது அண்ணனுடன் ஆபத்தானபுரம் பகுதிக்கு ஆடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி அழுது கொண்டு தனது தாயிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் உடனடியாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.