புதுக்கோட்டை: தாய் இறந்த சோகத்தில் மகனும் நெஞ்சுவலியால் உயிரிழப்பு

பொன்னமராவதி அருகே தாய் இறந்த சோகத்தில் மகனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே பொன்-உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் மருதம்மாள் என்ற சின்னப்பிள்ளை (93). இவர், வயது முதிர்வினால் உயிரிழந்த நிலையில், இவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை அவரது மகன் பழனியப்பன் (56) செய்து வந்தார்.
image
இந்நிலையில் தாய் இறந்த சோகத்தில் மனமுடைந்து காணப்பட்ட பழனியப்பனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உறவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழனியப்பனுக்கு இதயக் கோளாறு இருந்து வந்த நிலையில், அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ஒரே குடும்பத்தில் தாய் இறந்த சோகத்தில் மகனும் நெஞ்சு வலியால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.