பிரதாப் போத்தன் கொடுத்த செயின் என் கழுத்துல இப்போவும் இருக்கு! அழுதுகொண்டே பேசிய நடிகர் சத்யராஜ்


மறைந்த நடிகர் பிரதாப் போத்தன் குறித்து பேசும்போது நடிகர் சத்யராஜ் கண்கலங்கினார்.

1988ஆம் ஆண்டு சத்யராஜ் நடித்த ஜீவா படத்தை பிரதாப் போத்தன் இயக்கியிருந்தார். அப்போதைய காலகட்டத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

இந்த நிலையில், பிரதாப் போத்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சத்யராஜ், ஊடகத்தினரை சந்தித்து பேசியபோது மனமுடைந்து அழுதார்.

அவர் பிரதாப் போத்தன் குறித்து கூறுகையில், ‘என்னுடைய மிக நெருங்கிய நண்பர், அருமையான நடிகர் மற்றும் இயக்குனர் பிரதாப் போத்தன். எப்போதும் சிரித்துக்கொண்டே கலகலப்பாக இருக்கும் நபர்.

பத்து நாட்களுக்கு முன்பு கூட என்னிடம் பேசினார்.

Pratap Pothen

என்னை உரிமையாக யாராவது கிண்டல் செய்தால், திட்டினால் எனக்கு பிடிக்கும். அதில் ஒருவர் பிரதாப்.

ஜீவா படத்தின் படப்பிடிப்பில் அவர் அன்பளிப்பாக கொடுத்த செயின் தான் இது. என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்’ என தெரிவித்தார்.

மேலும் அவரே வெளியிட்ட வீடியோ ஒன்றில், ‘பிரதாப் போத்தனுடன் இருந்தால் பொழுது போவதே தெரியாது. குழந்தை போன்ற மனசு அவருக்கு. திடீரென இந்த செய்தி மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

Sathyaraj

அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கலைத்துறையினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறியிருந்தார்.

1992ஆம் ஆண்டு சத்யராஜை வைத்து மகுடம் என்ற படத்தையும் பிரதாப் போத்தன் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.