வெள்ளவத்தை விவேகானந்தா வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து இன்று காலை (22) நபர் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் நிர்மாணிக்கப்பட்டு வரும் நான்கு மாடி அடுக்குமாடி குடியிருப்பில் பெயின்டராக பணியாற்றி வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் அவர் நான்காவது மாடி படிக்கட்டில் இருந்து முதல் மாடியில் விழுந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது