விளையாட்டு, கலை, இலக்கியம் மற்றும் சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களில் 12 பேர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த வகையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிரபல இசைஞானி இளையராஜா அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்றதால் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க முடியவில்லை.
இந்த நிலையில், மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இசைஞானி இளையராஜா நாளை நடைபெற உள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது பதவியேற்க உள்ளார். இதற்காக அவர் இன்று டெல்லிக்கு சென்றுள்ளார்.