குறிஞ்சிப்பாடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!!

கடலூர், குறிஞ்சிபாடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த சிவசங்கரி குடும்பத்தினருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், தீர்த்தனகிரி மதுரா T. கள்ளயங்குப்பம் கிராமம், பொட்ட கரைமேடு காலனியைச் சேர்ந்த ஜெயசங்கர் என்பவரின் மனைவி சிவசங்கரி (வயது 33) (23.07.22) பிற்பகல் சுமார் 2.45 மணியளவில் அவர்களது வீட்டில் உறங்கிக் கொண்டிந்தபோது, எதிர்பாராதவிதமாக வீட்டின் கான்கிரீட் மேற்கூரையின் அடிப்பகுதி அவர்மீது இடிந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூபாய் இரண்டு இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.