முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமறைவாகவில்லை.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமறைவாகவில்லை.

அவர் மீண்டும் இலங்கை வருவார் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், போக்குவரத்து, பெருங்தெருக்கள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (26) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

முன்னால் ஜனாதிபதி உத்தியோகபூர்வ விசாவிலேயே வெளிநாட்டில் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். அவர் எப்போது நாடு திரும்புவார் என்பது தமக்கு தெரியவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.