சென்னை: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு 14-வது முறையாக தமிழக அரசு கால நீடிப்பு செய்துள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தமிழக அரசு மேலும் 3 வாரம் அவகாசம் வழங்கியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவக் குழு அறிக்கை தராததால் மேலும் 3 வார அவகாசம் கோரி அரசுக்கு ஆணையம் கடிதம் எழுதியிருந்தது.
