பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் நன்றி| Dinamalar

கொழும்பு: இலங்கை பார்லிமென்டில் அதிபர் ரணில் பொருளாதார நெருக்கடியில் தவித்த இலங்கைக்கு, உயிர் மூச்சு வழங்கிய இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி என கூறியுள்ளார்.

இலங்கை பார்லி.,யில் அதிபர் ரணில் கூறியிருப்பதாவது: பொருளாதார நெருக்கடியில் தவித்த இலங்கைக்கு, காலத்தே துணை நின்ற, இந்தியாவின் உதவியை ஒருபோதும் மறக்க மாட்டோம். இலங்கைக்கு உயிர் மூச்சு வழங்கிய இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி. தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள மலையக மக்களின் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். அரசாங்க வீடுகளுக்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படும். பார்லி.,யில் அனைவரும் இணைந்து செயல்படுவதே மக்களின் எதிர்பார்ப்பு. சிங்களர், தமிழர் என பிரிந்து செயல்பட்டால், முழு நாடும் பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.