முதல் காலாண்டில் ரூ.40 கோடி நிகர லாபத்தை இழந்த மும்பை பங்குச் சந்தை

மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) முதல் காலாண்டில் 6 சதவீதம் வரி வருவாய் அதிகரித்த நிலையிலும் நிகர லாபம் 23 சதவீதம் சரிந்துள்ளது.
முன்னணி பங்குச் சந்தையான மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ), ஜூன் 2022 இல் முடிவடைந்த மூன்று மாதங்களுக்கு நிகர லாபத்தில் 23 சதவீதம் சரிந்து ரூ.40 கோடியாக உள்ளது. இது, முந்தைய ஆண்டின் நிகர லாபம் ரூ.51.9 கோடியாக இருந்தது.

முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.185.7 கோடியாக இருந்த மொத்த வருவாய் 6.4 சதவீதம் அதிகரித்து ரூ.197.7 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஜூன் காலாண்டில் பங்குப் பிரிவில் பிஎஸ்இயின் சராசரி தினசரி விற்றுமுதல் 28 சதவீதம் குறைந்து ரூ. 4,057 கோடியாக உள்ளது.

மறுபுறம், செலாவணி பிரிவில் தினசரி சராசரி வருவாயை 4 சதவீதம் அதிகரித்து ரூ.24,567 கோடியாக உள்ளது. ஈக்விட்டி பத்திரங்கள், வணிக ஆவணங்கள், முனிசிபல் பத்திரங்கள், உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள் (இன்விட்கள்) போன்றவற்றின் மூலம் ரூ. 3.1 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

BSE இல் பதிவுசெய்யப்பட்ட மொத்த முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை தற்போது 11 கோடிக்கு அதிகமாக உள்ளது. மேலும் தொடர்ந்து முன்னேறி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.

எக்சேஞ்சின் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகம் முதல் காலாண்டில் 5.9 கோடி என்ற மிக உயர்ந்த காலாண்டு பரிவர்த்தனைகளை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் பதிவு செய்யப்பட்ட 3.5 கோடி பரிவர்த்தனைகளில் இருந்து 68 சதவிகித வளர்ச்சியாகும்.

பங்குச் சந்தை இன்றைய நிலவரம்
மும்பை பங்குச் சந்தை முதல் காலாண்டு முடிவுகள் வெளியான நிலையில் மும்பை பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகம் ஆகின.
பிஎஸ்இ குறியீட்டெண் 52.87 (0.29 சதவீதம்) புள்ளிகள் அதிகரித்து 58,350.53 என வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃபடி 42.70 புள்ளிகள் உயர்ந்து 17,388.15 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.