கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நேரடி கலந்தாய்வு நாளை (ஆகஸ்ட் 5 தேதி) முதல் ஆரம்பமாக உள்ளதாக கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
2022- 23ஆம் கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணைய வழியில் மேற்கொள்ளப்பட்டது. இதில், 4.07 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கடந்த ஆண்டை விட இந்தாண்டு கூடுதலாக 70 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இந்த நிலையில், மாணவர் சேர்க்கைக்கான நேரடி கலந்தாய்வு நாளை (ஆகஸ்ட் 5 தேதி) முதல் ஆரம்பமாக உள்ளதாக கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.