“ஜிகாதி நடவடிக்கைகளின் மையமாக அஸ்ஸாம் மாறிவருகிறது!" – முதல்வர் ஹிமந்தா பிஸ்வா குற்றச்சாட்டு

அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 5 மாதங்களில், வங்க தேசத்தைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான அன்சாருல் இஸ்லாத் குழுவுடன் தொடர்புடைய 5 தொகுதிகளை போலீஸ் கண்டுபிடித்திருக்கிறது. இந்த நிலையில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா, “ஜிகாதி நடவடிக்கைகளின் மையமாக அஸ்ஸாம் மாறிவருகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா

இது தொடர்பாகச் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஹிமந்தா பிஸ்வா, “கடந்த 5 மாதங்களில் மட்டும் புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன், அன்சருல்லா இஸ்லாத் குழுவுடன் தொடர்புடைய 5 தொகுதிகள் போலீஸாரால் கண்டறியப்பட்டு முறியடிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், அன்சாருல் இஸ்லாத்தைச் சேர்ந்த 6 பங்களாதேஷ் பிரஜைகள், இங்குள்ள இளைஞர்களைப் பயிற்றுவிப்பதற்காக அஸ்ஸாமுக்குள் நுழைந்திருக்கின்றனர். வெளி மாநிலங்களிலிருந்து வரும் இமாம்களால் தனியார் மதரஸாக்களில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் பயிற்றுவிக்கப்படுவது மிகவும் ஆபத்தானது.

போலீஸ்

பயங்கரவாதம் அல்லது கிளர்ச்சி போன்ற நடவடிக்கைகளிலிருந்து ஜிகாதி செயல்பாடு மிகவும் வேறுபட்டது. இது பல ஆண்டுகளாகப் போதனையுடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஊக்குவிப்பதில் தீவிரமாகப் பங்கேற்பது என, இறுதியாக இது நாசகார நடவடிக்கைகளுக்கு இட்டுச்செல்கிறது. இதனால், அஸ்ஸாம் ஜிகாதி நடவடிக்கைகளின் மையமாக மாறிவருகிறது. எனவே வெளியிலிருந்து யாரேனும் ஒரு மதரஸாவில் ஆசிரியராகவோ அல்லது இமாமாகவோ வந்தால் உடனே உள்ளூர் காவல்துறைக்கு முதலில் தகவல் தெரிவியுங்கள்” எனக் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.