1,200 ஆண்டுகள் பழைமையான வால்மீகி கோயில் – அனைத்து இந்துக்களும் வழிபட வழிவகை செய்த பாக். அரசு!

பாகிஸ்தானின் லாகூர் நகரில் 1,200 ஆண்டுகள் பழைமையான வால்மீகி மந்திர் எனும் கோயில் அமைந்திருக்கிறது. வால்மீகியின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அந்தக் கோயிலில் வழிபட முடியும் எனக் கூறப்படுகிறது. இந்தக் கோயில், இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்துக்கள் விட்டுச்சென்ற கோயிலாகும். கிருஷ்ணர் கோயிலைத் தவிர, லாகூரில் செயல்படும் ஒரே கோயில் வால்மீகி கோயிலான இதுதான்.

வால்மீகி கோயில்

இந்த நிலையில், இந்தியாவில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது, பாகிஸ்தானின் வால்மீகி கோயில் சிதைப்புக்குள்ளானது. அதைத் தொடர்ந்து, அந்தக் கோயிலை 20 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்வ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறிய குடும்பம் ஒன்று, உரிமை கொண்டாடி பராமரித்து வந்தது.

அண்மையில் அந்தக் கோயிலை பாகிஸ்தான் எவாக்யூ டிரஸ்ட் சொத்து வாரியம் (ETPB) மீட்டு புனரமைக்க முயன்றபோது, கோயிலுக்குச் சொந்தம் கொண்டாடும் குடும்பம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இந்தியா – பாகிஸ்தான்

இது தொடர்பாக பாகிஸ்தான் எவாக்யூ டிரஸ்ட் சொத்து வாரியத்தின் (ETPB) செய்தித் தொடர்பாளர் அமீர் ஹாஷ்மி செய்தியாளர்களிடம், “இந்து மதத்துக்கு மாறியதாகக் கூறும் கிறிஸ்தவக் குடும்பம், கடந்த இருபதாண்டுகளாக வால்மீகி கோத்திரத்தைச் சேர்ந்த இந்துக்களுக்கு மட்டுமே கோயிலில் வழிபாடு நடத்த வசதி செய்து வருகிறது. அதனால் அந்தக் கோயிலை மீட்டு அனைவருக்குமான கோயிலாக மாற்ற வேண்டும் என எவாக்யூ டிரஸ்ட் சொத்து வாரியம் (ETPB) முடிவு செய்து வழக்கு நடத்தியது. அதன் விளைவாக, தற்போது 100-க்கும் மேற்பட்ட இந்துக்கள், சில சீக்கியர்கள் வால்மீகி கோயிலில் தங்கள் மதச் சடங்குகளை நிறைவேற்றி வருகின்றனர். எனவே, வழக்கின் முடிவில் ஆக்கிரமிப்பாளர்கள் முழுவதுமாக வெளியேற்றப்பட்டவுடன் கோயில் முழுமையாக புனரமைக்கப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.