Airtel 5G: ஆகஸ்ட் இறுதிக்குள் ஏர்டெல் 5ஜி; நோக்கியா, எரிக்சனுடன் ஒப்பந்தம்!

Airtel 5G Launch date in India: எரிக்சன், நோக்கியா, சாம்சங் போன்ற தகவல் தொடர்பு உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனங்களுடன் பார்தி ஏர்டெல் கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தடங்கலற்ற 5ஜி சேவையை விரைந்து வழங்க, இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக ஏர்டெல் நிறுவனம் 5ஜி அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல், எரிக்சன், நோக்கியா ஆகிய நிறுவனங்கள் உடனான இணைப்பு, இந்தியாவில் நிர்வகிக்கப்படும் சேவைகளுக்காக ஏர்டெல்லின் தொடர்பை விரிவுபடுத்துவதற்கான தான் என சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.

பெரு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்த ஏர்டெல்:

மேலும், சாம்சங் உடனான கூட்டு இந்த ஆண்டு தொடங்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல், சமீபத்தில் நடந்த 5ஜி ஏலத்தில் 900 MHz, 1800 MHz, 2100 MHz, 3300 MHz, 26 GHz அலைக்கற்றைகளில் 19,867.8 MHz அலைவரிசையை தங்கள் வசம் ஒதுக்கியது. இதற்காக நிறுவனம் ரூ.43,084 கோடி செலவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்தி:
Jio 5G: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி; மலிவு விலையில் 5ஜி திட்டங்கள் கிடைக்குமாம்!

இந்தியாவில் 5ஜி புரட்சியை ஏற்படுத்த ஏர்டெல் தயாராகி வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏர்டெல் தலைமை செயல் அலுவலர் கோபால் விட்டல் கூறுகையில், “ஏர்டெல் ஆகஸ்ட் மாதம் 5ஜி சேவையை தொடங்கும் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”

5ஜி மூலம் ஏர்டெல் மாற்றத்தை ஏற்படுத்தும்:

“நெட்வொர்க் ஒப்பந்தங்கள் முடிவடைந்துவிட்டதாகவும், ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு 5G இணைப்பின் முழுப் பலன்களை வழங்க உலகெங்கிலும் உள்ள சிறந்த தொழில்நுட்பக் கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படும்.” என்று கூறினார்.

இந்தியா டிஜிட்டல் பொருளாதாரமாக மாறுவது தொலைத்தொடர்புத் துறையால் வழிநடத்தப்படும் என்றும், 5G சேவைகள் இந்தியாவின் தொழில்கள் மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சியில் ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் கொண்டுவரும் என்றும் விட்டல் கூறினார்.

மேலதிக செய்தி:
மடிக்கணினியின் பேட்டரி விரைவில் தீர்ந்துவிடுகிறதா? இந்த எளிய வழிகள் உங்களுக்கு உதவலாம்!

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஜியோ, வோடபோன் ஐடியா, ஏர்டெல், அதானியின் நிறுவனம் உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தீவிரமாக பங்கேற்றன. ரிலையன்ஸ் ஜியோ ஏலத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்தியது.

தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, நாட்டில் 13 நகரங்களில் 5ஜி நெட்வொர்க்குகள் முதலில் கிடைக்க வாய்ப்புள்ளது. 13 நகரங்களின் பட்டியலில் சென்னை, அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகியவை அடங்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.