கொல்கத்தா மியூசியத்தில் சிஐஎஸ்எப் வீரர் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் புகழ் பெற்ற பழமையான அருங்காட்சியகம் உள்ளது. ஒன்றிய கலாசார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இது உள்ளது. கடந்த 2019ம் தேதி முதல் இதன் பாதுகாப்பு பொறுப்பை ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) ஏற்றுக் கொண்டது. இங்கு இதன் வீரர்கள் பல தொடர்ச்சியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், நேற்று காலை தன்னுடன் பணியாற்றும் சக வீரர்களை நோக்கி ஒரு வீரர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில், ஒரு சப் இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிளும் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும், போலீஸ் காரின் மீதும் அந்த வீரர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில், டிரைவர் உட்பட பலர் காயமடைந்தனர். இதையடுத்து, அந்த வீரர் கைது செய்யப்பட்டார். தாக்குதலுக்கான காரணம் பற்றி அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.