சீனா அத்துமீறல்: இந்தியா எச்சரிக்கை| Dinamalar

லடாக்கில், இந்திய எல்லைக்கு அருகே சீன போர் விமானம் அத்துமீறி பறந்தது குறித்து, அந்த நாட்டு ராணுவ அதிகாரிகளிடம், இந்திய ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

ஜம்மு – காஷ்மீரின் லடாக் அருகே சீன போர் விமானம் கடந்த வாரம் அத்துமீறி பறந்தது. இந்திய விமானப் படை பதில் நடவடிக்கையில் இறங்கியதை அடுத்து, சீன விமானம் திரும்பிச் சென்றது.இந்நிலையில், இந்திய – சீன ராணுவ அதிகாரிகள் இடையே நேற்று முன்தினம் அமைதிப் பேச்சு நடந்தது. இதில் இந்திய விமானப் படை அதிகாரிகளும் பங்கேற்றனர்.அப்போது, இந்திய எல்லைக்கு அருகே சீன போர் விமானங்கள் பறப்பது குறித்து, இந்தியா தரப்பில் சீன அதிகாரிகளிடம் கவலை தெரிவிக்கப்பட்டது. மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதன் வாயிலாக, எல்லையில் தேவையற்ற பதற்றத்தை தடுக்க முடியும் என்றும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.