சேட்டிங் ஆப் மூலம் பெண்கள் போல பேசி ஆண்களுக்கு வலை – கோவை போலீஸில் சிக்கிய வழிப்பறி கும்பல்

கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் மூலமாக ஏராளமான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ‘கிரைண்டர் ஆப்’ எனும் செல்போன் செயலி மூலம் ஆண்களை குறிவைத்து மோசடி நடைபெற்று வருகிறது.

மோசடி ஆப்

சேட்டிங் ஆப்பான இதில், செல்போன் எண் வாங்கி எதிர்முனையில் பெண்கள் போல் பேசுவார்கள். பிறகு அவர்களை நேரில் வரவழைத்து ஓர் கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கோவையைச் சேர்ந்த பிரவீன் (25) என்பவர் அந்த ஆப்பை பயன்படுத்தி வந்துள்ளார். வேலை முடிந்து வரும் போது தனது செல்போனிற்கு வந்த அழைப்பின் அடிப்படையில் சூலூர் நாகமநாயக்கன்பாளையம் பகுதிக்கு பிரவீன் சென்றிருக்கிறார்.

வழிப்பறி

அங்கு ஒரு பெண் மற்றும் அவருடன் இருந்த 3 ஆண்கள் பிரவீனை வழிமறித்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டு, இருசக்கர வாகனம் ஆகிவற்றை பறித்து சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக பிரவீன் சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதையடுத்து, சூலூர் பகுதியை சேர்ந்த ரிதன்யா (20), ராஜேஷ் குமார் (24), இளந்தமிழன் (29) மற்றும் சுரேஷ் (23) ஆகிய நான்கு நபர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

அவர்களிடம் இருந்து வழிப்பறி செய்த வாகனங்கள் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பொதுமக்கள் இதுபோன்ற செல்போன் செயலிகள் மூலம் வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.