விண்ணில் பாய்ந்த SSLV ராக்கெட் – சில மணி நேரத்தில் ஏற்பட்ட சிக்கல்

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளான இஓஎஸ்-02 உடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே SSLV ராக்கெட்டின் சிக்னல் கிடைக்கவில்லை என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவிகள் சேர்ந்து உருவாக்கிய ஆசாதிசாட்  எனும் கல்விசாா் செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டது. அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கிய 6 மணி நேர கவுன்டவுன் முடிந்ததைத் தொடர்ந்து இரண்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டது.

144 கிலோ எடை கொண்ட இஓஎஸ்-02 செயற்கைக்கோள் புவி கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படவுள்ளது. இதேபோன்று 8 கிலோ எடை கொண்ட ஆசாதிசாட் செயற்கைக்கோளில் சோலார் பேனல்களை படம்பிடிக்கும் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தகவல்தொடா்பு, தொலையுணா்வு மற்றும் வழிகாட்டி செயற்கைக்கோள் திட்டங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயல்படுத்தி வருகிறது. அதற்காக, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் விண்ணில் செலுத்தப்பட்ட SSLV ராக்கெட்டின் சிக்னல் கிடைக்கவில்லை என்றும் எல்லா படிநிலைகளும் வெற்றிகரமாக முடிந்துள்ளது, ஆனால் சிக்னல் இழப்பு விவகாரம் தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.