ஓ.பன்னீர்செல்வம் போட்ட ஸ்கெட்ச் – எடப்பாடி பழனிசாமி செம ஷாக்!

தரப்புக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், கட்சியில், புதிய நிர்வாகிகளை நியமிக்க, முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஇஅதிமுகவில், கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வந்த இரட்டைத் தலைமை விவகாரம், கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி ஒருவழியாக முடிவுக்கு வந்தது. ஓ.பன்னீர்செல்வத்தின் கடும் எதிர்ப்புக்கு இடையே, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக, எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார்.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், பதிலுக்கு போட்டியாக, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார். இப்படி இரு தரப்பினரும் மாறி மாறி கட்சி நிர்வாகிகளை சேர்த்தும், நீக்கியும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். எனினும், சட்டப் போராட்டங்களில், எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு சாதகமான எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வரவில்லை.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில், அதிமுகவில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யும் முடிவில் ஓ.பன்னீர்செல்வம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டப்படி, இன்னும் தான் தான் ஒருங்கிணைப்பாளர் என்பதால் அதை பயன்படுத்தி புதிய நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் நியமிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே போல் தனது சார்பாக புதிய எதிர்க்கட்சி துணைத் தலைவரை தேர்வு செய்து, அதை தமிழக சட்டப்பேரவை சபாநாயகருக்கு அனுப்பும் திட்டத்திலும் ஓ.பன்னீர்செல்வம் இருப்பதாகக் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமாக இருக்கும் ஒருவரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்வு செய்து, அவர்கள் குழுவிற்கு உள்ளேயே கலகம் ஏற்படுத்தும் திட்டத்திலும், ஓ.பன்னீர்செல்வம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், அதிமுகவில் புதிய கொறடா, புதிய தலைமை நிலைய செயலாளர், தலைமை கழக உறுப்பினர்களையும் விரைவில் ஓ.பன்னீர்செல்வம் நியமிக்க போகிறார் என்றும் கூறப்படுகிறது. கட்சியில் இரண்டு குழுக்கள் உள்ளன என்பதை நிரூபிக்கவே இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக செயல்பட்டு நியமனங்களை செய்து, ஓ.பன்னீர்செல்வத்தை ஒதுக்கி வைத்தார். இப்போது அதே அஸ்திரத்தை எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த உள்ளார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.