கேரளாவில் குரங்கு அம்மை அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் இருந்து மாயம்..!

கேரளாவில் குரங்கு அம்மை நோய் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர், மருத்துவமனையில் இருந்து மாயமான நிலையில், அவரை ஆளுவா போலீசார் தேடி வருகின்றனர்.

அமீரகத்தில் தங்கியிருந்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய நபர், குற்ற வழக்கு காரணமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்ததால் ஆளுவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.

அதில் அவருக்கு சாதாரண அம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து அந்த நபர் மாயமாகியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.