கேரளாவில் பலத்த மழையால் 30 அணைகளில் நீர் திறப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


மூணாறு : கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த இரு வாரங்களில் மின்வாரியம், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 30 அணைகளில் நீர் திறக்கப்பட்டுள்ளது.

latest tamil news

கேரளாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட முன்கூட்டியே மே 29ல் துவங்கியது. எனினும் ஜூனில் சரியாக பெய்யவில்லை. ஜூலையில் முதல் இரு வாரங்கள் பலத்த மழை பெய்து பின் சற்று குறைந்தது.ஜூலை 31ல் மழை மீண்டும் தீவிரமடைந்து கடந்த 10 நாட்களாக கொட்டித்தீர்த்தது.
அணைகளில் நீர்மட்டம் உயர்ந்ததால் பாதுகாப்பு கருதி மின்வாரியம், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 30 அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள 14 அணைகளில் 8 அணைகள் திறக்கப்பட்டுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.