பெய்ஜிங்: கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கரோனா வைரஸால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கரோனாவின் தாக்கம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தற்போது புதிய வைரஸ் அங்கு உருவாகியுள்ளது.
சீனாவின் ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாகவும், இதுவரை அந்த வைரஸால் 35 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கிழக்கு சீனாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தொண்டை சவ்வு பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட வைரஸுக்கு லாங்யா ஹெனிபா என பெயரிடப்பட்டுள்ளது. அது விலங்குகளிடமிருந்து மனிதர் களுக்கு வந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு காய்ச்சல், சோர்வு, இருமல், பசியின்மை, குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த வைரஸ் மனிதர்களிடம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு தீவிரமானது அல்ல என்றும் கூறுகின் றனர்.
மேலும் இந்த வைரஸ் தாக்கிஇதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது. லாங்யா வைரஸ் தாக்குதலை தடுக்க இதுவரை மருந்துகண்டுபிடிக்கவில்லை.