கர்நாடகாவில் 21 நாட்கள் எம்.பி., ராகுல் முகாம்| Dinamalar

பெங்களூரு : “பாரத் ஜோடோ யாத்திரையை முன்னிட்டு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கர்நாடகாவில் 21 நாட்கள் தங்கி இருப்பார்,” என மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் கூறினார்.கர்நாடக காங்கிரசின் பிற்படுத்தப்பட்ட பிரிவு சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ், முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் பிறந்த நாள் விழா பெங்களூரில் நேற்று கொண்டாப்பட்டது.

மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் கூறியதாவது:நாடு முழுதும் காங்கிரஸ் சார்பில் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ நடக்க உள்ளது. அதுபோல கர்நாடகாவிலும் இந்த யாத்திரை நடக்கிறது. இதை முன்னிட்டு காங்கிரஸ் எம்.பி., ராகுல், 21 நாட்கள் கர்நாடகாவில் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார்.ஏற்கனவே சுதந்திர பேரணியை வெற்றி பெற வைத்துள்ளீர்கள். அதே போலவே, ராகுல் பங்கேற்கும் யாத்திரையையும் நாடே திரும்பி பார்க்கும் வகையில் செய்ய வேண்டும்.

இந்த பேரணியில் மாவட்ட காங்கிரஸ் பிரமுகர்கள், தொண்டர்கள் பங்கேற்க வேண்டும்.இது தொடர்பாக பல மாவட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. முதல்வர் பசவராஜ் பொம்மை ஆர்.எஸ்.எஸ்.,ஐ திருப்திப்படுத்தவே நேரு படத்தை கைவிட்டுள்ளார். வரலாற்றை மறைக்கும் செயலை செய்துள்ளார். யாராலும் வரலாற்றை மறைக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.