பங்குசந்தை: அதானி பங்குகள் 1.69% உயர்வு

வெள்ளிக்கிழமை (செப்.2) வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 36.74 (0.06%) புள்ளிகள் உயர்ந்து 58,803.33 என வர்த்தகத்தை நிறைவு செய்தது.
தேசிய பங்குச் சந்தையை (என்எஸ்இ) பொறுத்தமட்டில் நிஃப்டி 3.35 (0.02%) சரிந்து 17539.45 என வர்த்தகத்தை நிறைவு செய்தது.

தேசிய பங்குச் சந்தையில் ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபின்சர்வ், பார்தி ஏர்டெல், பிபிசிஎல் நிறுவன பங்குகள் அதிகப்பட்ச நஷ்டத்திலும், அதானி போர்ட், அப்பல்லோ ஹாஸ்பிட்டல், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஈஸர் மோட்டார்ஸ் பங்குகள் அதிக லாபத்திலும் வணிகத்தை நிறைவு செய்தன.

அதேபோல் மும்பை பங்குச் சந்தையில், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐடிசி லாபத்திலும் ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டிஸ் , ஹெச்சிஎல் டெக் நஷ்டத்திலும் வணிகமாகின.

பிஎஸ்இயில் ஹச்டிஎஃப்சி நிறுவன பங்குகள் அதிகப்பட்சமாக 1.75 சதவீதம் வரை உயர்ந்து ஒரு பங்கின் விலை ரூ.2445.45 எனவும், என்எஸ்இயில் அதானி போர்ட் நிறுவன பங்குகள் 1.69 சதவீதம் வரை உயர்ந்து ஒரு பங்கின் விலை ரூ.851.95 எனவும் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.