பழங்குடி இனத்தவர் மோதலில்சூடானில் 380 பேர் பலி| Dinamalar

கெய்ரோ :சூடானில், ஜன., முதல் ஆக., வரை, பழங்குடி இனத்தவரிடையே நடந்த மோதல்களில், ௩௮௦ பேர் கொல்லப்பட்டு உள்ளதாக, ஐ.நா., சபை தெரிவித்துள்ளது. ஐ.நா.,வின் மனிதநேய ஒருங்கிணைப்பு அலுவலகம், நேற்று வெளியிட்ட அறிக்கை:வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், பழங்குடி இன குழுக்களுக்கு இடையே, தொடர்ந்து மோதல்கள் நடந்து வருகின்றன.

இதையடுத்து, அங்கு குழப்பமும், அமைதியின்மையும் நீடிப்பதால், ௧.77 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த ஆண்டு, ஜன., முதல் ஆக., வரை நிகழ்ந்த ௨௨௪ மோதல்களில், ௩௮௦ பேர் கொல்லப்பட்டுள்ளனர்; ௪௩௦க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சமீபத்தில், புளூநைல் மாகாணத்தில், நான்கு நாட்களுக்கு நீடித்த மோதலில், இரண்டு குழந்தைகள் உட்பட, ௨௩ பேர் கொல்லப்பட்டனர். மேலும், ௧௦ குழந்தைகள் உட்பட ௨௩ பேர் காயமடைந்தனர். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.