கராச்சி- பாகிஸ்தானில் போதைப் பொருள் விற்ற எட்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இது குறித்து, குவெட்டா டி.ஐ.ஜி., அஸ்பர் மைசர் நேற்று தெரிவித்ததாவது:பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் போதைப் பொருள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வந்தது.இது குறித்து ஏராளமான புகார்கள் வந்தன. இந்நிலையில், நகரின் ஒதுக்குப்புறத்தில் போதைப் பொருள் விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசாருக்கும், போதைப் பொருள் விற்பவர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், எட்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் போதைப் பொருள் கடத்தல்காரர்களும் அடக்கம். சம்பவ இடத்தில் இருந்து போதைப் பொருள்களும், நவீன ரக ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கராச்சி- பாகிஸ்தானில் போதைப் பொருள் விற்ற எட்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இது குறித்து, குவெட்டா டி.ஐ.ஜி., அஸ்பர் மைசர் நேற்று தெரிவித்ததாவது:பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்