போதைப்பொருள் விற்ற 8 பேர் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை| Dinamalar

கராச்சி:பாகிஸ்தானில் போதைப் பொருள் விற்ற எட்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குவெட்டா டி.ஐ.ஜி., அஸ்பர் மைசர் நேற்று தெரிவித்ததாவது: பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் போதைப் பொருள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வந்தது. இது குறித்து ஏராளமான புகார்கள் வந்தன. நகரின் ஒதுக்குப்புறத்தில் போதைப் பொருள் விற்கப் படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்ற போலீசாருக்கும், போதைப் பொருள் விற்பவர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், எட்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் போதைப் பொருள் கடத்தல்காரர்களும் அடக்கம். சம்பவ இடத்தில் இருந்து போதைப் பொருள்களும், நவீன ரக ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.