சென்னை:
தனுஷ்
–
செல்வராகவன்
கூட்டணியில்
உருவாகியுள்ள
நானே
வருவேன்
படத்திற்கு
ரசிகர்களிடம்
அதிக
எதிர்பார்ப்பு
காணப்படுகிறது.
நானே
வருவேன்
படத்தின்
முதல்
சிங்கிள்
வெளியான
நிலையில்,
விரைவில்
ட்ரெய்லர்
வெளியாகும்
என
எதிர்பார்க்கப்பட்டது.
SIIMA
விருதுகள்
வழங்கும்
விழாவில்
நானே
வருவேன்
பட
ட்ரெய்லர்
வெளியாகும்
எனவும்
தகவல்
வெளியாகியிருந்தது.
தனுஷ்
–
செல்வராகவன்
கூட்டணி
தனுஷ்
–
செல்வராகவன்
கூட்டணீயில்
வெளியான
காதல்
கொண்டேன்,
புதுப்பேட்டை
படங்கள்
தமிழ்
சினிமாவில்
நிகழ்த்திய
மாயாஜாலம்
அனைவரும்
அறிந்ததே.
தனுஷின்
ஆரம்பகால
சினிமா
பயணத்தை
செல்வராகவன்
தான்
குருவாக
இருந்து
வழிநடத்தினார்.
இருவருமே
அண்ணன்,
தம்பியாக
இருந்தாலும்,
ஷூட்டிங்
ஸ்பாட்டில்
வேற
லெவலில்
உழைப்பை
கொடுப்பவர்கள்.
அதனால்
தான்
தனுஷ்
இன்று
தனது
கேரியரில்
உச்சத்தில்
இருக்கிறார்.

மீண்டும்
இணைந்த
அண்ணன்,
தம்பி
காதல்
கொண்டேன்,
புதுப்பேட்டை
படங்களுக்குப்
பிறகு,
2011ல்
மயக்கம்
என்ன
படத்தில்
தனுஷ்
–
செல்வராகவன்
கூட்டணி
இணைந்தது.
அதன்பிறகு
புதுப்பேட்டை
படத்தின்
2ம்
பாகத்தில்
இருவரும்
இணைவார்கள்
என
ரசிகர்கள்
எதிர்பார்த்தனர்.
ஆனால்,
‘நானே
வருவேன்’
என
அப்டேட்
கொடுத்த
இருவரும்,
இப்போது
அந்தப்
படத்தை
முழுவதுமாக
முடித்துவிட்டனர்.
இந்தப்
படத்தில்
தனுஷ்
இரட்டை
வேடங்களில்
நடித்துள்ளதாகக்
கூறப்படுகிறது.

நானே
வருவேன்
ட்ரெய்லர்
ரிலீஸ்?
தனுஷ்,
செல்வராகவன்
மட்டும்
இல்லாமல்,
நானே
வருவேன்
படத்தில்
இசையமைப்பாளர்
யுவனும்
இணைந்தார்.
இதனால்
இந்தப்
படத்தின்
மீதான
எதிர்பார்ப்பு
நாளுக்கு
நாள்
அதிகரித்துக்
கொண்டே
இருக்கிறது.
இந்நிலையில்,
நானே
வருவேன்
படத்தின்
முதல்
பாடல்
வெளியாகி
நல்ல
வரவேற்பை
பெற்றுள்ளது.
இதனைத்
தொடர்ந்து
இந்தப்
படத்தின்
ட்ரெய்லர்,
SIIMA
திரைப்பட
விருதுகள்
விழாவில்
வெளியாகும்
என
சொல்லப்பட்டது.

மெளனம்
காக்கும்
நானே
வருவேன்
டீம்
ஆனால்,
SIIMA
விருதுகள்
நாளை
(செப்
11)
நடைபெறவுள்ள
நிலையில்,
இதுவரையிலும்
நானே
வருவேன்
ட்ரெய்லர்
ரிலீஸ்
குறித்து
எந்த
அறிவிப்பும்
இல்லை.
படக்குழு
தரப்பில்
இருந்து
இதுவரை
எந்த
அதிகாரப்பூர்வ
அறிவிப்பும்
வெளியாகவில்லை
என்றாலும்,
ரசிகர்கள்
நம்பிக்கையுடன்
காத்திருந்தனர்.
ஆனால்,
தொடர்ந்து
படக்குழு
மெளனமாக
இருப்பதால்,
தனுஷ்
ரசிகர்கள்
ஏமாற்றத்தில்
உள்ளனர்.
அதேபோல்,
நானே
வருவேன்
வரும்
29ம்
தேதி
வெளியாகும்
என
கூறப்பட்ட
நிலையில்,
ரிலீஸ்
தேதி
குறித்தும்
இன்னும்
எந்த
அறிவிப்பையும்
படக்குழு
வெளியிடவில்லை.