வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச
ஆகியோர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் தலைவர் பெடாரியோ
வில்லியர்ஸைச் சந்தித்துள்ளனர்.
உள்நாட்டுப் பொறிமுறைகள்
உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இதன்போது
மீண்டும் வலியுறுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை நடைமுறைகளை மேம்படுத்துவதில் இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாடு பற்றி கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள்
மேலும், தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கான பங்களிப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.