சிறுவனை மரத்தில் கட்டிவைத்து துன்புறுத்திய கோயில் பூசாரி; வைரலான வீடியோ – என்ன நடந்தது?

மத்தியப் பிரதேசத்தில் கோயிலில் பிரசாதத்துக்கு வைத்திருந்த பாதாம் பருப்பை எடுத்துச் சாப்பிட்ட சிறுவன் மரத்தில் கட்டிவைத்துத் துன்புறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்தியப் பிரதேசம், சாகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஜெயின் சத்தய்தன் கோயில். இந்தக் கோயிலில் சாமிக்குப் பிரசாதத்துக்காகக் கோயில் பூசாரிகள் பாதாம் பருப்புகளைப் படைத்திருக்கின்றனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன் அந்த பாதாம் பருப்புகளை எடுத்துச் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. அதைக் கண்டு ஆத்திரமடைந்த கோயில் பூசாரி, அந்தச் சிறுவனை மரத்தில் கட்டிப்போட்டு அவனைத் துன்புறுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

மரத்தில் கட்டிவைக்கப்பட்ட சிறுவன்

சிறுவனைப் பூசாரி கயிற்றைக் கொண்டு மரத்தில் கட்டிவைத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இது குறித்து, கோயில் பூசாரியான ராகேஷ் ஜெயினிடம் காவல்துறையினர் விசாரித்த நிலையில், சிறுவன் தப்பித்து விடக்கூடாது என்ற நோக்கத்திற்காகவே அவனைக் கட்டிவைத்ததாக அவர் கூறியுள்ளார்.

மேலும் இதைப்பற்றி அந்தச் சிறுவனின் குடும்பத்தாரிடம் விசாரித்தபோது, சிறுவன் கோயில் வாசலில் நின்றுகொண்டிருந்த சமயத்தில், அவன் கோயிலுக்குள் நுழைவது பிடிக்காமல் அந்த பூசாரி அவனைத் தாக்கியதாகக் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், அந்தச் சிறுவனின் தந்தை மோட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குற்றம்சாட்டப்பட்ட பூசாரிமீது எஸ்.சி/எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.