திருமணமான ஐந்தாவது நாளில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில், வெளிநாட்டில் வேலை பார்த்துவந்த இளைஞர் ஒருவர் திருமணமான ஐந்தாவது நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

குவைத்தில் வேலை பார்த்து வரும் பிரசாத் என்பவருக்கு 5-ந் தேதி திருமணம் நடைபெற்றது. மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் பிரசாத் 2 நாட்களாக அளவுக்கதிகமாக மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த பிரசாத் அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டு தூக்கில் தொங்கியதாக கூறப்படுகிறது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.