புதுடில்லி, :புதுடில்லியில் சராய் ரோஹில்லா என்ற இடத்தில் உள்ள தொழிற்சாலைக்குள் இஸார் என்ற ௧௯ வயது இளைஞர் நுழைந்துள்ளார். அங்கு, அவர் ஒரு மொபைல் போனை திருடியபோது, கியானி என்ற தொழிலாளி பிடித்து விட்டார். அந்த இளைஞரை சாலைக்கு இழுத்து வந்த கியானியும், மற்ற தொழிலாளர்களும் சேர்ந்து, ‘பிளாஸ்டிக்’ பைப்பால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில், அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சாலையில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பது குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து வழக்கு பதிந்த அவர்கள், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கியானி மற்ற தொழிலாளர்களுடன் சேர்ந்து அடித்ததை உறுதி செய்தனர். அவரை கைது செய்த போலீசார், மற்றவர்களை தேடி வருகின்றனர்.
புதுடில்லி, :புதுடில்லியில் சராய் ரோஹில்லா என்ற இடத்தில் உள்ள தொழிற்சாலைக்குள் இஸார் என்ற ௧௯ வயது இளைஞர் நுழைந்துள்ளார். அங்கு, அவர் ஒரு மொபைல் போனை திருடியபோது, கியானி என்ற தொழிலாளி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்