மாண்டியா : பாண்டவபுராவின், சந்திரே கிராமத்தில் 30 அடி ஆழ கிணற்றில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தையை, போலீசார், மகளிர், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் மீட்டனர்.மாண்டியா, பாண்டவபுராவின், சந்திரே கிராமத்தில் சாலை அருகில், 30 அடி ஆழமான பாழுங்கிணறு உள்ளது. இதில் தண்ணீர் வற்றியுள்ளது. இதில் அப்பகுதி மக்கள் தேவையற்ற கழிவுகள், குப்பை கொட்டுகின்றனர்
நேற்று காலை கிணற்றுக்குள், குழந்தையின் அழுகுரல் கேட்டது. அப்பகுதியில் வசிக்கும் சிலர், இதை கவனித்து, எட்டி பார்த்தனர். குழந்தை கிடப்பது தெரிந்தது. இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.மகளிர், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுடன், அங்கு வந்த போலீசார், பச்சிளம் ஆண் குழந்தையை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையின் உடலை எறும்புகள் கடித்துள்ளன. சிகிச்சை தொடர்கிறது.குழந்தையை கிணற்றில் வீசியவர்களை கண்டுப்பிடிக்கும் முயற்சியில் பாண்டவபுரா போலீசார் இறங்கியுள்ளனர்.
மாண்டியா : பாண்டவபுராவின், சந்திரே கிராமத்தில் 30 அடி ஆழ கிணற்றில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தையை, போலீசார், மகளிர், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் மீட்டனர்.மாண்டியா, பாண்டவபுராவின்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்