மாண்டியா : ”மாண்டியா மாவட்டத்தின், உயிர் நாடியான மை ஷுகர் சர்க்கரை ஆலையை, மீண்டும் திறக்கும் விஷயத்தில், அரசு சொன்னபடி நடந்து கொண்டுள்ளது,” என கலால் துறை அமைச்சர் கோபாலய்யா தெரிவித்தார்.மாண்டியாவில், நேற்று அவர் கூறியதாவது:மை ஷுகர் சர்க்கரை ஆலையின் மேம்பாடு தொடர்பாக, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தகவல் பெறப்பட்டுள்ளது.
ஆலையின் முதல் பாய்லர் ஏற்கனவே செயல்பட துவங்கியது. இரண்டாவது பாய்லர், வரும் 19ல் துவங்கப்படும். வரும் 30 முதல், விவசாயிகளிடம் கரும்பு பெற்று, பிழியும் பணிகள் துவங்கப்படும்.கரும்பு கொள்முதல் தாமதமானதால், வேறு ஆலைகள் ஏற்கனவே ஒரு லட்சம் டன் கரும்பை கொள் முதல் செய்துள்ளன. நமது ஆலை 100 சதவீதம் கரும்பை வாங்குவோம். மாண்டியாவின், அனைத்து விவசாயிகளிடம் கரும்பு வாங்குவோம். எங்கள் அரசு சொன்னபடி நடந்து கொண்டது. நிரந்தரமாக ஆலை செயல்பட வேண்டும் என்பது, எங்களின் குறிக்கோள்.இவ்வாறு அவர் கூறினார்.
மாண்டியா : ”மாண்டியா மாவட்டத்தின், உயிர் நாடியான மை ஷுகர் சர்க்கரை ஆலையை, மீண்டும் திறக்கும் விஷயத்தில், அரசு சொன்னபடி நடந்து கொண்டுள்ளது,” என கலால் துறை அமைச்சர் கோபாலய்யா
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்